பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனம்! -புதுச்சேரி முதல்வர்

Default Image

பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனமான செயல்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலை கண்டித்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், பெரியார் சிலையை அவமதித்தது கோழைத்தனமான செயல் என்றும், அவர் சுயமரியாதை இயக்கத்தின் சின்னம் என்றும், உலகம் இருக்கும் வரை பெரியாரின் சீர்திருத்த போதனைகள் நினைவு கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்