அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.
சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை கலையரசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள், புகார்தாரர்கள் என்று அனைவரிடமும் விசாரணை நிறைவுபெற்றது. வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதில், இறுதிக்கட்ட அறிக்கையைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், அறிக்கை சமர்ப்பிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டனர். இந்நிலையில், 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…