“மாணவர்களை போல தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது”- பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்

Default Image

10 -ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பரவிவரும் சூழலில், அக். 2- வது வாரத்திற்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

மேலும், 10- ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தனித்தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் இறுதியில் நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்