பொங்கல் முடிந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது..

Published by
Kaliraj
  • எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் நான்கு மீனவர்கள் கைது.
  • பொங்கல் முடிந்து திரும்பியவர்களுக்கு இலங்கை கொடுத்த பொங்கல் பரிசு.

தை பொங்கல் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, நேற்று காலை  96 விசைப்படகுகளில் மீன்வள துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு அதிவேகமாக  வந்தது.

Image result for நள்ளிரவில் இலங்கை கடற்படை கைது

இதைப்பார்த்த பல மீனவர்கள் கடற்படைக்கு பயந்து தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் அங்கு, பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த படகில் மீன் பிடிப்பதற்காக  இருந்த பாரதி , அசோகன், சக்தி குமார் , மணி  ஆகிய 4 பேரும் இலங்கை கடற்படையிடம் நாங்கள் எங்கள் கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறினர். ஆனாலும், இலங்கை கடற்படையினர், இது இலங்கைக்கு சொந்தமான பகுதி, இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும்.

மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.பின், அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்கள் உட்பட அனைத்தையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும். அதன்பின்னரே புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
Kaliraj

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

39 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

49 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

2 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago