சென்னை துறைமுக அதிகாரி என கூறி 45 கோடியை மோசடி செய்த இந்தியன் வாங்கி மேலாளர்!

Published by
Rebekal

சென்னை துறைமுக அதிகாரி எனக்கூறி 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் 500 கோடி ரூபாயை கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி நிலையான வைப்பு நிதியாக செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்பு கனேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என கூறிக்கொண்டு வைப்புக் கணக்கில் உள்ள 100 கோடி ரூபாயை இரண்டு நடப்பு கணக்குகளில் 50 கோடி ரூபாய் ஆக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். சென்னை துறைமுகத்தின் பரிந்துரை கடிதம், அனுமதி சான்று ஆகியவற்றை போலியாக தானே தயாரித்துக் கொண்டு மோசடி கணக்குகளை தொடங்கியதாகவும் கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் சேர்ந்து முதற்கட்ட நடப்பு கணக்குக்கு 50 கோடி ரூபாயை மாற்றி, அதிலிருந்து 45 கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றியுள்ளனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கு எழுந்த சந்தேகத்தால் அடுத்த 50 கோடி ரூபாயை மாற்ற கணேஷ் நடராஜன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் வந்தபோது அதிகாரிகள் உதவியுடன் கோயம்பேடு காவல்துறையினரை வைத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

மோசடியில் மத்திய அரசு ஊழியர்களும் தொடர்பில் இருப்பதால் சிபிஐ புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னை துறைமுக அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த கனேஷ் நடராஜன் மணிமொழி மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் சிபிஐ வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளனர். மேலும் இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago