Rain in Tamilnadu [File Image]
தமிழகத்தில் கடந்த மாத முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணாமாக இன்னும் சில நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில் மிதிலி புயல் வெங்கடலில் உருவாகி அது ஒடிசா, வங்கதேசம் நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கு கனமழையை கொடுத்தது. அடுத்து தற்போது இன்னொரு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம்..!
அதாவது, குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்திற்கு வரும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய கூடும் என்றும் இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும் கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…