இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள். அதனை மீட்டெடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ‘ என தனது கருத்துக்களை முன்வைத்தார்.
இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் , ‘ இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே இந்திய அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…