தேர்தல் ஆணை விதி முறைகளை மீறி அதிக அளவில் செலவு செய்ததால் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும், என்று சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதிஷியிடம் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன், சுயேட்சை வேட்பாளர்கள் எம்.சங்கரசுப்ரமணியன் , பி.பாலமுருகன், சிஎம்.ராகவன், எஸ்.மாரியப்பன், வி.திருமுருகன், சுதாகர் பாலாஜி, வி.ராஜிவ் விக்டர் ஆகியோர் மனு அளித்த விபரம்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி.நாராயணன் வெற்றி பெற்றதாக கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரூ.56 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ரூ.34 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் ரூ.32 லட்சம் செலவிட்டுள்ளதாகவும் இதை தேர்தல் செலவின் கணக்கு பார்வையாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணை விதிகளின் படி ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரையில் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் விதிகளை மீறி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்தை அதிகமாக செலவு செய்துள்ளார்கள். இதனால் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றிப்பெற்றதை ரத்து செய்ய வேண்டும். என்று சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…