சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு பலவிதங்களில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
ஒவ்வொரு மாநிலங்களிலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற தேவைகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மக்களுக்கு ,உதவும் வகையில், தனிநபர்களும், பிரபலமான நிறுவனங்களும் கூட உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இந்த பணம் செலவிட உதவியாக இருக்கும். இந்திய அரசும், மாநில அரசுகளும் ஆரம்பித்திருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களை தரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த பணம் செலவிடப்படும். இது தவிர எங்கள் ஊடகங்கள் இந்திய மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…