இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் சென்னைக்கு வரும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு.!

Published by
Ragi

இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதை அடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து சென்று விட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இ-பாஸ் தளர்வால் சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பின் அவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதில் எந்த தளர்வும் வழங்கப்படாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by
Ragi

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago