வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று,வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இதனால் தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது. வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை வருவதாக தெரிவிக்கப்பட்டது.அதுபோல் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் சிமெண்ட் குடோனில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது .மேலும் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெறுவதாக வருமானவரித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…