ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…!

Default Image

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை. 

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறையில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீடு மற்றும் இவரது சகோதரர்கள்  மூவருக்கு தொடர்புள்ள 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனென்றால், இவரது சகோதரர்கள் பழனிவேல் அதிமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் ஒப்பந்தம் பெற்று உள்ளாட்சி துறை சார்பில்  வழங்கப்பட்ட  சில ஒப்பந்தங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் உள்ள சில குற்றச்சாட்டுகளின் பெயரில் தான் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், 6 இடங்களில் 40 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்