Minister AV Velu [File Image]
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என திருவண்ணாமலை, சென்னை பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதலே இந்த சோதனையானது தீவிரமடைந்து வருகிறது. அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அமைச்சரின் உறவினர்களின் வீடுகள் , நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் என சென்னை, திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழை பெய்யும்!
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அருணை பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிந்து, பின்னர் அந்த வழக்கில் இருந்து எ.வ.வேலு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…