குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நடந்து கொள்வதற்கு விசிக கண்டனம்.
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இரு அவைகளுக்கும் தலைவரான ஜனாதிபதியை அழைக்காமல் அவரை அவமதிப்பால் விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதியே ஆவார். சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசு தலைவரை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நடந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் பெயரை கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுகிறது. பழங்குடியினத்தவரை ஜனாதிபதி ஆக்கினோம் என தேர்தல் ஆதாயத்துக்காக பேசிய பாஜக, தற்போது அவரை அவமதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் விழாவின்போது அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பாஜக அரசு அழைக்கவில்லை.
பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதன கொள்கையை உயிர் மூச்சியாக கொண்டுள்ளது பாஜக என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதுபோன்று, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவரை அவமதித்துள்ளதால் மே 28-ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…