இந்த 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை என 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

tn heavy rain

சென்னை :  தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர். நீலகிரி, ஈரோடு, கடலூர், கரூர்,  திருப்பத்தூர், அரியலூர், திண்டுக்கல், தேனி,  பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் கனமழை இருப்பதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்