அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும்…!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!
அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் .சென்னைக்கு கிழக்கே 860 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 900 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
அதேபோல் வரும் 15ம் தேதி தமிழகம், புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடலோர ஆந்திரா, ராயல்சிமா ஆகிய பகுதிகளுக்கு தற்போது அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.