கோடநாடு வழக்கில் வி.சி.ஆறுகுட்டியிடம் 3-வது முறையாக விசாரணை..!

Default Image

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள  நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், கோவை தொழிலதிபர் மணல் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், தற்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு வழக்கில் வி.சிஅறுகுட்டி 3வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்