பொதுப்பணம் தனிப்பட்ட பணமாக மாறி உள்ளது. வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தநிலையில், இன்று சென்னையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநில மையக்குழு கூட்டம் பங்கேற்ற பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமலாக்கத்துறை வருமான வரித்துறை மூலம் மக்கள் பணம் வெளியே வருகிறது.
பொதுப்பணம் தனிப்பட்ட பணமாக மாறி உள்ளது. வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தமிழ்நாட்டின் அரசு அதிகாரிகளே ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…