தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பானது 10,000 க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது.இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த நிலையில்,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக,சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸினால் 42 பேர் இறந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து,5925 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால்,தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக உள்ளது.தற்போது,70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…