தமிழத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்குவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் அதிகம் நடைபெறுவதாகவும் கூறிய அவர், தமிழகத்தில் 1.2% எனும் அளவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…