சிவகங்கையில் காதலை கைவிட மறுத்த இளைஞர் வீடு புகுந்து கொலை..!

Published by
பால முருகன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் சக்திவேல். சக்திவேல் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் மணிவேல், இந்நிலையில் இந்த இரண்டு குடும்பத்திற்கும் கோவில் கட்டுவது தொடர்பாக முன்னதாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேலும் இந்த நிலையில், மணிவேல் தங்கை கீர்த்திகாவுடன் சக்திவேல் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்

தாக கூறப்படுகிறது , மேலும் ஏற்கனவே கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதத்தில் இரு குடும்பத்தாருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்து இரண்டு குடும்பத்திற்கும் மேலும் பகையை உண்டாக்கியது.

இந்நிலையில் இதனால் கோபமடைந்த மணிவேல், சக்திவேலை அழைத்து தனது தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று பல முறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் கூறியுள்ளார். இதனை சக்தி வேல் கேட்காமல் தொடர்ந்து கீர்த்திகாவுடன் பேசிவந்துள்ளார், மேலும் இதனால் கோபமடைந்த மணிவேல் நேற்று இரவு மது போதையில் சக்திவேலின் வீட்டிற்கு சென்றார்.

மேலும் சக்திவேல் தனது வீட்டின் மாடியில் இருந்த போது வேகமாக மணிவேல் சென்று நான் எத்தனை முறை கூறினேன் என் தங்கையிடம் பேசுவதை நிறுத்திக்கொள் என்று ஆனால் நீ கேட்டகவில்லை என்று சொல்லிவிட்டு சக்திவேலை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்திய வைத்து மணிவேல் சக்திவேலை குத்தியுள்ளார், இதனால் சம்பவ இடத்திலே சக்திவேல் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சக்திவேல் உடைலை கைப்பற்றினர் மேலும் கொலை செய்த குற்றவாளி மணிவேலையும் கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

49 mins ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

1 hour ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

2 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

2 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

2 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

2 hours ago