சிவகங்கையில் காதலை கைவிட மறுத்த இளைஞர் வீடு புகுந்து கொலை..!

Default Image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் சக்திவேல். சக்திவேல் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் மணிவேல், இந்நிலையில் இந்த இரண்டு குடும்பத்திற்கும் கோவில் கட்டுவது தொடர்பாக முன்னதாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேலும் இந்த நிலையில், மணிவேல் தங்கை கீர்த்திகாவுடன் சக்திவேல் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்

தாக கூறப்படுகிறது , மேலும் ஏற்கனவே கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதத்தில் இரு குடும்பத்தாருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்து இரண்டு குடும்பத்திற்கும் மேலும் பகையை உண்டாக்கியது.

இந்நிலையில் இதனால் கோபமடைந்த மணிவேல், சக்திவேலை அழைத்து தனது தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று பல முறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் கூறியுள்ளார். இதனை சக்தி வேல் கேட்காமல் தொடர்ந்து கீர்த்திகாவுடன் பேசிவந்துள்ளார், மேலும் இதனால் கோபமடைந்த மணிவேல் நேற்று இரவு மது போதையில் சக்திவேலின் வீட்டிற்கு சென்றார்.

மேலும் சக்திவேல் தனது வீட்டின் மாடியில் இருந்த போது வேகமாக மணிவேல் சென்று நான் எத்தனை முறை கூறினேன் என் தங்கையிடம் பேசுவதை நிறுத்திக்கொள் என்று ஆனால் நீ கேட்டகவில்லை என்று சொல்லிவிட்டு சக்திவேலை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்திய வைத்து மணிவேல் சக்திவேலை குத்தியுள்ளார், இதனால் சம்பவ இடத்திலே சக்திவேல் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சக்திவேல் உடைலை கைப்பற்றினர் மேலும் கொலை செய்த குற்றவாளி மணிவேலையும் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk