மதுரையில் 50 பேருக்கு ‘கருப்பு பூஞ்சை’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில்,தற்போது அடுத்த அச்சுறுத்தலாக பிளாக் ஃபங்கஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது.அதாவது,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சிலருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக,கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் உடலின் நோய்எதிர்ப்பு சக்தி குறைகிறது.எனவே,கொரோனாவில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.
இந்த கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்வலி,கண் வீக்கம்,அதன் பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக,சிலருக்கு மூக்கில் ரத்தம் வருதல்,மூளையிலும் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழக்க வேண்டிய சூழலும் உண்டாகிறது.
அந்தவகையில்,இன்று காலை தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியை சேர்ந்த 57 வயதுடைய முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,தற்போது மதுரையிலும் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து,மதுரை அரவிந்த மருத்துவமனை கண் மருத்துவர் உஷா கிம் கூறியதாவது,”கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது”, எனக் கூறினார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…