மீண்டும் ஓர் வேங்கைவயல்.? விழுப்புரம் குடிநீர் கிணற்றில் மலம் கழித்த மர்ம நபர்கள்.? 

Vilupuram VK Palayam open well

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை குழு ஒன்றரை ஆண்டுகள் விசாரணை செய்தும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. அதற்குள் அடுத்தாக ஓர் முகம்சுழிக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில்நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ஓர் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் மோட்டார் அமைத்து அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படும். அங்குள்ள 100 குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த திறந்தவெளி குடிநீர் கிணறு தான் உள்ளது.

இப்படி இருக்கும் இந்த கிணற்றில், மதுபோதையில் சில மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். கிணற்றின் மீதுள்ள தடுப்பு சுவற்றின் மீது மனித மலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested