ஓசூரில் எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு.!

Default Image

கிருஷ்ணகிரி: ஓசூரில் அனுமதியில்லாமல் வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன், துணைத் தலைவர்  உட்பட 300 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை இன்று ஓசூர் பகுதியில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஓசூரில் அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட 300 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்