தனது சொந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… பல்வேறு நலதிட்டங்கள் தொடக்கம்.!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

இதில் முதற்கட்டமாக, பந்தற்காட்ர்ன் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 4.37 கோடி மதிப்பீட்டில் பள்ளி மைதானம் அடிக்கல் நட்டுதல், பள்ளி கட்டடம் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளார். மேலும்,  மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்துள்ளார்.

சிடி தோட்டம் முதல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூப்பந்து விளையாட்டு திடலை திறக்க உள்ளார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அரசு மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் 33 பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

அடுத்து பள்ளி சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறக்க உள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை திறந்து வைக்க உள்ளார். அதே போல, நீர் ஏற்று நிலையத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உடன் சென்னை மேயர் , முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்