உண்மையாக, இயக்கத்திற்காக, எதிர்பார்ப்பின்றி உழைப்பவர்களை உயர்த்தித் தூக்கிப் பிடிப்பவர் முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் சேகர் பாபு

Published by
லீனா

உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சேகர்பாபு பேட்டி.

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக முதல்வர் கிறிஸ்மஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதேபோன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் நமது பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களும் முதல்வரின் அழைப்பின் பேரில், கலந்து கொள்ளவுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உயர்ந்தவர் தாழ்ந்தவர், இன்னார் இனியவர் என்றில்லாமல் அனைவரும் ஒன்றே. தமிழகத்தை பொருத்தவரை சாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தோடு மக்கள் ஒற்றுமையோடும் என்றும் வாழ விரும்பும் முதல்வர் இன்றைய தமிழக முதல்வர் என்பது நிரூபணமாகிறது.

மேலும் அவரிடம், திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனைத்து செயல்பாடுகளிலும் தமிழக முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே தமிழக முதல்வர் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார். மேலும் மக்கள் பணி சிறப்படைய அவரும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

12 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

13 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

14 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

15 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

17 hours ago