சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் அண்னா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் ஓலா (OLA) மற்றும் உபர் (UBER) நிறுவனத்தில் பணிபுரியும் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று சேப்பாக்கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,நிறுவனங்கள் தங்களிடம் பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும்,கடந்த 5 வருடங்களாக ஊதியமானது தங்களுக்கு உயர்த்திக்கொடுக்கப்படாமல் உள்ளதால், அதனை 80% உயர்த்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால்,யாரும் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
இந்நிலையில்,திடீரென்று அவர்கள் தங்கள் கார்களை எடுத்துக்கொண்டு,அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால்,அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ,ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,போராட்டத்தை கலைத்தனர்.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…