கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இருந்து NDA கூட்டணி சார்பில், எம்.பி.க்களை அனுப்புவோம் என எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை என்பது வருத்தம்.
ஏதேனும் தவறு இருந்தால் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விவாதிப்போம். மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர எம்.பி.க்களை ஆதரிப்போம். இந்தத் தேர்தலை ஒரு பாடமாகப் பார்க்கிறோம், முன்பை விட சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்.
நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3 முனை போட்டியில் இருந்து 2 முனை போட்டியாக மாறினால் தான், பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று கூறிஉள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…