கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இருந்து NDA கூட்டணி சார்பில், எம்.பி.க்களை அனுப்புவோம் என எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை என்பது வருத்தம்.
ஏதேனும் தவறு இருந்தால் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விவாதிப்போம். மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர எம்.பி.க்களை ஆதரிப்போம். இந்தத் தேர்தலை ஒரு பாடமாகப் பார்க்கிறோம், முன்பை விட சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்.
நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3 முனை போட்டியில் இருந்து 2 முனை போட்டியாக மாறினால் தான், பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று கூறிஉள்ளார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…