பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் எஸ்.பி.பியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இன்று மதியம் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்பாவுக்குச் சிகிச்சை தரும் ஒட்டுமொத்த மருத்துவக் குழுவையும் சந்தித்தேன். அப்பாவின் நிலை பற்றி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தபோது எந்த நிலையில் இருந்தாரோ அதை விட தற்போது அவர் தேறியிருக்கிறார். நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…