#Breaking: இ-பாஸ் நடைமுறை தொடரும்.. எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள், வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல்,

  • கோயம்பேடு உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கு தடை.
  • திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
  • வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் இரவு 8 மணி வரை வழிபாட்டு நடத்த அனுமதி.
  • வணிக வளாகங்கள், காய்கறி கடை, பெரிய மளிகை கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • உணவகங்கள், டீ கடைகளுக்கு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை அனுமதி.
  • கேளிக்கை விடுதிகளில் 50 சதவித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • பொழுதுபோக்கு பூங்கா, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • திருமண விழாவில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும்.
  • இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி.
  • மாவட்ட பேருந்துகள், மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை. இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி.
  • விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
  • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்.
  • சின்னத்திரை, திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற அனுமதி. திரைப்பட நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதை உறுதி செய்ய வேண்டும்.
  • உள் அரங்கங்களில் நடைபெறும் கல்வி, அரசியல், கலாச்சாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
  • டாக்ஸியில் ஓட்டுனரை தவிர்த்து 3 பேருக்கும், ஆட்டோவில் ஓட்டுனரை தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • நோய்கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு தொடரும்.

Published by
Surya

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

13 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

35 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

45 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

2 hours ago