அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ்செல்வன்.
இவருக்கு தற்போது திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இவர் அமமுகவில் இருந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவிலும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வனை போல அமமுகவில் இருந்து விலகி வந்தவர் வி.பி.கலைராஜன்.இவருக்கு திமுகவில் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி திமுக வந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…