தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – சலூன் கடைக்கு செல்ல ஆதார் அவசியம்.!

Default Image

சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களை சலூன் கடைக்காரர்கள் குறித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சலூன் கடைகளில் முடிவெட்ட செல்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவே இந்த ஏற்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju