முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
தேர்வு எப்போது?:
இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மே 21ம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
காலிப்பணியிடங்கள்:
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும்,நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் பிப். 23-ஆம் தேதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும் மார்ச் 23 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அறிவிப்பாணை:
அதன்படி,குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டது.இதனையடுத்து,பிப். 23-ஆம் தேதி முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இன்றே கடைசி நாள்:
இந்நிலையில்,குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மார்ச் 23 ஆம் தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.மேலும்,இது தொடர்பான முழு விவரங்களை பெற http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…