நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! புகாரில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது

Default Image

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேடப்பட்டுவந்த உதித்சூர்யா குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தேனி மருத்துவ கல்லூரிக்கு புகார்  தெரிவிக்கப்பட்டது. .இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன்.இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.உதித் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்றது.மேலும் உதித் சூர்யாவை காவல்த்துறையினர் தேடி வந்தனர். நீட் தேர்வில்  ஆள் மாறாட்டம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர்  தனிப்படை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.இதனையடுத்து வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் உதித்சூர்யா குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டார்.திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து உதித்சூர்யா, அவரது தந்தை மற்றும் தாயை தனிப்படை போலீசார் கைது செய்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்