நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! காவல்துறையில் புகார்

Default Image

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மும்பையில்  எழுதினார்.தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார் அந்த நபர்.

இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது  தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் சம்பத்தப்பட்ட மாணவனின் விவரத்தை மேல்விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவைத்தார்.இந்த நிலையில் மாணவர் மீது தேனி  காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார் டீன்.புகாரில்  ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்