இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

Published by
Ramesh

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்திய திரையுலகில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இசைஞானி இளையராஜா.
இவரின் மகள் பவதாரிணி (47) தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அதற்கான  சிகிச்சையை இலங்கையில் இருந்தபடி எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தைப்பூச நாளில் கோயில் தேர் சரிந்து விழுந்து விபத்து.!

மறைந்த பவதாரிணிக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இருவருமே பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர்.
பவதாரிணியின் கணவர் பெயர் சபரிராஜ் ஆகும். பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடியதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளார் பவதாரிணி. குறைந்த வயதில் பவதாரிணி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Ramesh

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago