மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா இன்று தனது பதவியை மாநிலங்களவையில் ஏற்றுக்கொண்டார்.
கலைத்துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவை, இலக்கியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை குடியரசு தலைவர், அதில் சிறந்த 12 நபர்களை தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யலாம்.
அப்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது 12 பேரை தேர்வு செய்து இருந்தார். அதில், தமிழகத்தை சேர்ந்த பி.டி.உஷா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், பாகுபலி கதாசிரியர் விஜேந்திர பிரசாத் உட்பட 12 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கடந்த திங்கட்கிழமை மாநிலங்களவை கூடும்போது இளையராஜாவை தவிர மற்ற அனைவரும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா மாநிலங்களவையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உறுதிமொழி எடுத்து ஏற்றுக்கொண்டார். அதில் முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்தினார் இசைஞானி.
இறுதியாக மாநிலங்களவை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடவுளின் பெயரால் நான் ஆணையிட்டு கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார் இசைஞானி இளையராஜா.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…