ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு! உரிய விசாரணை நடத்தகோரி SFI மாணவர்கள் போராட்டம்!

Default Image

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் இன்டெர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்தபோது, அதில், பாத்திமா, தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள் காரணம் என அவர் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ( SFI ) ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முனைந்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட SFI மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்