கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் – மு.க.ஸ்டாலின் உரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழாவில் கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விலையில் கழக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து உறுப்பினர் அட்டையை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது. இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கினார் முக ஸ்டாலின். பின்னர் பேசிய ஸ்டாலின், கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று தெரிவித்தார். கொரோனா வைரசால் ஒரு உயிர் கூட போகாது என்ற சொன்னவர் முதல்வர். ஆனால், 8,000 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது. முதல்வர் என்ன சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பாட்சா பலிக்காது. நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை, இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தெளிவு இருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேரக் கூடிய நிதியை பெற முடியுமா? சி.ஏ.ஏ.வை எதிர்த்தீர்களா? என பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். தமிழக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இதுதான் முப்பெருவிழா சபதம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலைக்கு முதல்வர் பழனிசாமி தான் காரணம் என்று பதிலடி கொடுத்துள்ளார். 7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மேலும், திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

57 minutes ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

3 hours ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

4 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

4 hours ago