மக்களின் உணர்வுகளை தமிழக ஆளுநர் புரிந்துகொண்டால் சரி.! திருமாவளவன் டிவீட்.!

Published by
மணிகண்டன்

‘தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.’ என பதிவிட்டுள்ளார். – திருமாவளவன் டிவீட். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் குறிப்பிடுகையில் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் சரியாக இருக்கும் என் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. இதனை அடுத்து இன்று இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த அறிக்கையை குறிப்பிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ தமிழ்நாடா? தமிழகமா? என அன்று விவாதத்தைக் கிளப்பியது குதர்க்கவாதம். ‘நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது’ என இன்று
விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம். தனது பிழையை உணர்ந்து வருந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக ஆளுநர். என குறிப்பிட்டு,

‘தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டால் சரி.’ என பதிவிட்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago