ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தீ குளிப்போம்….!!! தூத்துக்குடி மக்கள் கண்ணீர் மல்க பேட்டி….!!!!

Published by
லீனா

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பு தீ குளிப்போம் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

உயிரிந்தவர்களின் உறவினர்கள் பேட்டி :

Image result for தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இந்த பேட்டியில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது வேடிக்கை பார்க்க சென்றவர்களை கூட சுட்டு கொன்றுள்ளனர். இறந்த பிறகு கூட அவர்களது உடல்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவு :

ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு எதிராக போராடுபவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தான் அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி நீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால், தூத்துக்குடியில் மேலும் பல உயிர்கள் போகும் என்றும், மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பாக தீக்குளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

பொது வாக்கெடுப்பு :

எங்களது உயிர் உள்ளவரை ஆலையை திறக்க விடமாட்டோம். எங்களது குடும்பத்தை சீர்குலைத்த ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என்றும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருப்பதாக கூறினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என முடிவெடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago