“பூமித்தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால்”…….. – எம்.பி கனிமொழி ..!

Published by
Edison

பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ  வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின்னர்,பேசிய எம்.பி கனிமொழி அவர்கள் ,”தற்போது உள்ள காலநிலை மாற்றம் என்பது நாம் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய நிலையில் இல்லை.காரணம்,இது நமது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை பாதிக்கக்கூடிய சூழலை உருவாக்கிவிடும்.ஏனெனில்,ஐபிசிசி ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதிகள் வெப்ப மயத்தின் காரணமாக பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனினும்,தமிழக அரசு தனது பட்ஜெட்டில் இந்த காலநிலை மாற்றத்தை கண்காணிப்பதற்காக தனி நிதியை ஒதுக்கியுள்ளது.” என்று கூறிய நிலையில்,“பூமித்தாய் என்று சொல்லாமல், பூமி தந்தை என்று  சொல்லியிருந்தால் ஒருவேலை இயற்கைய அழிக்காமல் இருந்திருப்போமோ? என்னவோ!”,என்றும் கேள்வியெழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து,செய்தியாளர்கள் சந்திப்பில் எம்பி திருமாவளவன் கூறுகையில், “மனிதக்குலத்தின் செயல்பாடுகள் காரணமாகவே, புவி வெப்பமடைகிறது.இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கைகள்  நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசப்படும்.மேலும், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை பாடப்புத்தகத்தில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

12 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

13 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

14 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

16 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

16 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

17 hours ago