என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினார். பின்னர் கொரோனாவால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவது இல்லை என புகார் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவர்கள் சரியாக பணிக்கு வரவில்லை என்றாலும் அல்லது பணி செய்யவில்லை என தெரியவந்தாலும் இட மாற்றம் செய்யமாட்டேன், வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சரித்தார்.
நான் யாரையும் பழிவாங்க மாட்டேன், என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன். அதுதான் என்னுடைய சுபாவம். எனவே, எந்த பிரச்சனை என்றாலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். நான் வரவேண்டிய அவசியமில்லை, தொலைபேசியிலேயே விவகாரம் முடிந்து விடும் என கூறினார்.
மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே கொரோனா வந்தபோதும் தான் உயிர் பிழைத்ததாக தெரிவித்தார். பள்ளிகள் தற்போது திறந்துள்ளதால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…