ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காவிடில்….. இடைதேர்தலை புறக்கணிப்போம்…!!!

Default Image

மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி நிலவி வருகிறது.
அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இங்கு ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தென்கால் பாசன விவசாய சங்கத்தினரும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய சங்கத்தினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். இதனை எதிர்த்து தனியொரு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கூடாது என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து டி.ஆர்.ஓ குணாளன் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், தனியொரு சங்கத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்