கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நிர்வாகிகளை நீக்கத்தான் செய்வோம் – முதல்வர் பழனிசாமி பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமாவுடன் கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை. எல்லா கட்சிகளிலும் தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும். இடஒதுக்கீடு விஷயத்தில் எந்த சூழலில் எதை செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என கூறியுள்ளார். சென்ற இடமெல்லாம் மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது. அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார். நிதிநிலையை பொருத்து அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்யும். கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் நடந்தாலும் தமிழகத்தில் செய்யவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. அதிமுக வேறு, அமமுக வேறு, தினகரன் தொடர்ந்து மூக்கை நுழைத்து பார்க்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஏதும் நிச்சயம் நடக்காது.

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விருப்பப்பட்டால் அதனை தலைமை முடிவு செய்யும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தினகரன் குறித்து தான் அதிகம் பேசுறீங்க, சசிகலா பற்றி ஏதும் பேசமாற்றிங்க என்ற கேள்விக்கு, கட்சியில் இல்லாதவரை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும் என கூறியுள்ளார். தினகரன் தான் தலையிட்டு 18 எம்எல்க்களை பிரித்து, அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால், கட்சியை உடைக்கவும், கலைக்கவும் முடியவில்லை. பின்னர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதனால் தான் அவரை பேசிக்கொண்டு இருக்கிறோம் என பதில் கூறியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை. அதிமுகவில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நிர்வாகிகளை நீக்கத்தான் செய்வோம். கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டி அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார் என வேலுமணி பேசியதற்கு முதல்வர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வரிடம், திமுகதான் பொது எதிரி அவர்களை சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார் என்று கேள்விக்கு, அது அவருடைய கருத்து, இதற்கு நாங்கள் எப்படி சொல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் வழக்குகளை விசாரிக்க ஏற்கனவே தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளது. ஸ்டாலின் அறியாமையால் பேசுகிறார். எங்கள் கட்சியை பற்றி துரைமுருகன் கவலைப்பட அவசியமில்லை. அவர் கட்சியை முதலில் பார்க்க சொல்லுங்கள். அதிமுகவின் ஒற்றுமையை குறித்து திட்டமிட்டு தவறான பரப்புரையை செய்கிறார்கள். நாங்கள் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago