நாங்கள் இதை செய்தால் உங்க பிழைப்பு நாறிடும் – எச்.ராஜா

Default Image

நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும் என எச்.ராஜா ட்விட். 

2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் இன்று  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை எதிர்த்து நாளை சட்டமன்றத்தில் தீர்மானம். வேளச்சேரி சன்ஷைன் பள்ளி உட்பட திமுக முன்னோடிகள் நடத்தும் சி பி எஸ் சி பள்ளிகளை சமச்சீர் பள்ளிகளாக மாற்றக் கோரி நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்