ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீரை கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும்-துரைமுருகன் எச்சரிக்கை

Default Image

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூட்டம் நேற்று  நடைபெற்றது.இதில் பேசிய முதல்வர் தொடர்ந்து சில வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டது.
இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் காவிரி கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும் .இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தான் முதன்மையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்