தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும்! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி!

Published by
லீனா

தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி. 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கூடாது எனக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில், பட்டப் படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால், அதன் நோக்கமே சிதைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்து விடும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில், அஞ்சல் வழியில், தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு, அரசாணையில் திருத்தம் கொண்டு வரும் வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நடத்த ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பி, நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago