பெற்றோர் – ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “நம் பள்ளி – நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மைக் குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் பெற்றோர் – ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் அடுத்த ஆண்டுகளில் இருந்து, வழக்கம் போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்